Friday, 15 December 2017

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழாவில் மருது வரலாறு மீட்பு குழுவின் நிகழ்ச்சிகள்

அகமுடையார் பேரினத்தின் வரலாற்றிலே 268 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக இன்று மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழா மருது வரலாறு மீட்புகுழு சார்பில் கொண்டாடப்பட்டது ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார் மாமன்னர் பெரிய மருது பாண்டியர்...!!! 

பார்வையற்ற பள்ளி குழந்தைகளுக்கு அன்னதான விழா நடைபெற்றது...!!! 

சிவகங்கை சீமை தோன்ற காரணமாக இருந்த அகமுடையார் வழித்தோன்றல் சாத்தப்பன் ஞானியார்...!!! 

வழக்கம் போல சாத்தப்பன் ஞானியார் சிலைக்கு மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது...!!! 

காளையார் கோவில் முன்பு கூடியிருந்த மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்கள்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் 269 வது பிறந்த நாள் விழாவில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் பெரிய மருது பாண்டியர் திருஉருவ சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரை அலங்கரிக்க காத்திருந்த பூஜை பொருள்கள்...!!!  

அபிஷேகம் நிறைவடைந்து மாமன்னர் பெரிய மருது பாண்டியருக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது பாண்டியர் அபிஷேக ஆராதனையை காண வந்திருந்த மருது வரலாறு மீட்பு இளைஞர்கள்...!!! 

நிகழ்ச்சியின் முடிவில்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியர் பிறந்த நாள் விழாவில் அடுத்த கட்டமாக முத்தூர் அரண்மனையில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது வரலாறு மீட்பு குழு இளைஞர்களுடன் மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மனைவி கருப்பாயி ஆத்தாளின் முத்தூர் அரண்மனையில்...!!! 

மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் பிறந்த நாள் விழாவில் இறுதியாக திருப்பத்தூர் நினைவிடத்தில் மருது வரலாறு மீட்பு குழு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வணங்கி வந்தோம்...!!! 

திருப்பத்தூர் நினைவிடத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது...!!! 

மருது பாண்டியர்கள் தூக்கிலிடப்பட்ட இடத்தில் மருது பாண்டியர்களின் திருப்பத்தூர் வாரிசுதார்கள் சார்பில் 269 வது பிறந்த நாள் விழா இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது...!!! 


அந்த வேலையில் அவர்கள் கூறியது (இத்தனை காலம் மருது பாண்டியர்கள் பிறந்த நாளை மறந்து வாழ்ந்தோம் இன்று உங்களால் (மருது வரலாறு மீட்புகுழுவால்) தான் இந்த செய்தி தெரிந்தது இனி வரும் காலங்களிலும் கட்டாயம் வணங்குவோம் என்றனர்...!!!

இத்தனை காலம் நமது வரலாற்றை மறந்து வாழ்ந்தது போதும் இனியாவது விழித்தெழுவோம் இன்று நாம் தூவிய சிறு விதைகள் வருங்காலத்தில் விருட்சமாக உருவெடுக்கும் என்ற நம்பிக்கையில் நமது பயணம்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

Friday, 8 December 2017

இரத்தத்தில் கையெழுத்திட்டு நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் போர் புரிந்த ஜெயராமன் முதலியார் அகமுடையார்

மாவீரர் ஜெயராமன் முதலியார் (அகமுடையார்) 

நாட்டிற்க்கு உழைத்த விடுதலை வீரர் என்ற விருதை ஜெயராமன் முதலியாருக்கு APJ அப்துல்கலாம் வழங்கிய போது 

ஹிட்லர் அளித்த THE ITALY STAR  விருது 

மத்திய அரசு அளித்த தாமரை பட்டயம் 

மாநில அரசு அளித்த தாமரை பட்டம் 

ஜெயராமன் முதலியார் அகமுடையாரின் முழு தகவல் படிவம் மற்றும் அவர் வகித்த பதவிகள் 


போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் ஜெயராமன் முதலியார் அவர்கள் வேலூர் உசூர் பகுதியில் 21.3.1921 ம் வருடத்தில் பிறந்தார் இவர் தனது இளம் வயதிலேயே ஐ.என்.ஏ எனும் இந்திய தேசிய ராணுவப் படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது இவர் தனது 13 வயதில் அணைக்கட்டு பகுதியில் மவுண்ட் என்ற பள்ளியில் படித்து வந்தார் அந்த நேரத்தில் அப்பகுதியில் தேசிய பற்றாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து காந்தி பற்றிய பாடல்களை பாடியும் ஜெயராமன் முதலியாருக்கு கற்றும் கொடுத்தனர் அந்த பாடல்களை விரும்பி கற்றுக்கொண்ட ஜெயராமன் முதலியார் தான் படிக்கும் மவுண்ட் பள்ளியில் இந்த பாடலை பாடுகிறார் ஆனால் அந்த பள்ளி ஆங்கிலேயரின் பள்ளி என்பதால் அங்குள்ள ஆசிரியர்கள் மிகுந்த கோபத்துடன் ஜெயராமன் முதலியாரை அடித்தனர் ஜெயராமன் முதலியார் அந்த ஆசிரியரை பதிலுக்கு பதில் அடிக்கு அடி கொடுத்துவிட்டு அந்த ஊரைவிட்டே சென்றுவிடுகிறார் எங்கு தேடியும் கிடைக்காத ஜெயராமன் முதலியார் சில மாதங்களுக்கு பிறகு ஹிட்லரின் ஜெர்மன் படையில் பணியாற்றுவதாக தகவல் கிடைக்கிறது...!!! 

அந்த சமயத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய நாட்டின் விடுதலைக்காக ஹிட்லரிடம் உதவி கேட்கிறார் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உங்கள் படையில் உள்ள இந்திய சிப்பாய்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்று கேட்க அதனை ஏற்ற ஹிட்லர் சுமார் முப்பதாயிரம் வீரர்களை இந்தியா அனுப்புகிறார் அந்த வீரர்கள் இரத்தத்தில் கையெழுத்திட்டு தாய் நாட்டின் விடுதலைக்காக போராட வந்தனர் அதில் ஜெயராமன் முதலியாரும் ஒருவர்...!!!

சரியான உணவு உறக்கம் கிடையாது எந்த வகையிலும் வருமானம் கிடையாது உயிருக்கு உத்திரவாதமும் கிடையாது இதனை எல்லாம் மனப்பூர்வமாக ஏற்று இரத்தத்தில் கையெழுத்திட்டு நாட்டை காக்க வாருங்கள் என்று கூற அதன்படியே வேலூர் மாவட்டத்திலே முதல் ஆளாய் நேதாஜியின் ஐ.என்.ஏ படையில் ராக்கெட் பாராசூட் பிரிவில் சிறப்பு அதிகாரியாக பணியாற்றினார் மாவீரர் ஜெயராமன் முதலியார்...!!!

இத்தாலியின் படையில் ஜெயராமன் முதலியார் பணியாற்றிய போது அங்கு நடந்த ஒரு போரில் இவர் பலரை கொன்று குவித்ததால் இத்தாலியன் அரசாங்கம் இவருக்கு ''THE ITALY STAR'' என்ற விருது வழங்கி சிறப்பித்தது ஹிட்லர் அரசாங்கம் மேலும் இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு தாமரை பட்டையம் விருது அளித்து கெளரவித்தது மேலும் பாரத் ரத்னா மேதகு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் APJ அப்துல்கலாம் நேதாஜியின் இந்திய ராணுவப்படையில் பணியாற்றியதற்கு ''நாட்டிற்கு உழைத்த விடுதலை வீரர்'' எனவும் விடுதலை போராட்ட தியாகி எனவும் கெளரவப்படுத்தினார் மேலும் மாநில அரசு தாமரை பட்டம் விருது வழங்கி சிறப்பித்தது...!!!

சுதந்திரம் பெற வேண்டி சுமார் 8 ஆண்டுகள் குடும்பத்தினரை பிரிந்து இருந்தார் ஜெயராமன் முதலியார் சுதந்திரத்திற்குப் பிறகும் பல்வேறு சமூகப்பணிகளை மேற்கொண்டு வந்த இவர் 2007ம் வருடம் டிசம்பர் 8ம் நாள் இவ்வுலக வாழ்வை நீத்தார் இவர் மறைந்த டிசம்பர் 8ம் நாளில் இந்த மாவீரரை நினைவு கூருவதில் மருது வரலாறு மீட்பு குழு பெருமையும் மகிழ்வும் கொள்கிறது வாழ்க அகமுடையார் வழித்தோன்றல் ஜெயராமன் முதலியார் புகழ்...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

Tuesday, 5 December 2017

மேலமண்று திருமால் தேவர் அகமுடையார்


மதுரை நாயக்கர் ஆட்சி காலத்தில் சாப்டூர் ஜமீனில் மதயானை ஒன்று அப்பகுதியை நாசம் செய்து அரண்மனைக்குள் நுழைய முயன்றது அந்த சமயம் போர்க்குடி அகமுடையார் பேரினத்தில் பிறந்த திருமால் தேவர் (அகமுடையார்) தன் வாள் கொண்டு யானை துதிக்கையை வெட்டி அந்த யானையை அடக்கினார் இதனை கண்ட திருமலை நாயக்கர் உனக்கு என்ன வேண்டும் என கேட்க அதற்க்கு திருமால் தேவர் #மேல_மண்று (திருமங்கலம் மேற்கு) பகுதியின் வரிவசூல் செய்யும் உரிமை கேட்க அவர் விருப்படியே அந்த பகுதியின் தலைவராகவும் வரிவசூல் செய்யும் உரிமை பெற்றார் திருமால் தேவர் 33 கிராமங்களை கொண்ட மேல மண்று இன்றும் இராஜ குல அகமுடையார் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர் இன்று வரை மேல மண்று தலைவர் திருமால் தேவர் வாரிசுகளே...!!!

இவன் மருது வரலாறு மீட்பு குழு