216 வருடங்களுக்கு முன்பு நமது மருது சீமை (சிவகங்கை) வேலூர் கிராமத்தின் சிறப்பு அம்சங்கள்...!!!
மாமன்னர் மருது பாண்டியர்கள் ஆட்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் மானாமதுரை பகுதியில் வேலூர் கிராமத்தில் மக்கள் வீரத்திலும் விவேகத்திலும் சிறந்து விளங்கினார்கள் அதை கண்ட மருது சகோதரர்கள் அவர்களை சுமார் 18 கிராமங்களுக்கு காவல் வேலையில் அமர்த்தி இந்த ஊர்களை நீங்கள் பார்த்து கொள்ள வேண்டும் என்றனர் அதன்படி வேலூரை தலைகிராமமாக கொண்டு இன்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களை காவல் காத்து கொண்டு வருகிறார்கள் வேலூர் அகமுடையார்கள் இதில் சீரம்பட்டி அகமுடையார்கள் சில ஊர்களுக்கு கணக்கு சம்பந்தப்பட்ட வேலை பார்த்துள்ளார்கள் என்பது தெரிய வந்துள்ளது இன்னும் வேலூர் அகமுடையார்களை கண்டு நிறைய கிராமங்கள் மரியாதை கொடுத்து வரவேற்கின்றனர் என்பது பெருமையான செய்தி மருது அரசர்கள் நியமித்த வேலூர் காவல்காரர்களின் வம்சாவளி இன்னும் சில கிராமங்களை காவல் காத்து வருகிறார்கள் மானாமதுரை பகுதியிலே வேலூர் கிராமம் 216 ஆண்டுகளாக ஒரே மாதிரியான நிலைமையும் தோற்றமும் இன்னும் கொண்டிருக்கிறதாம் அருகில் உள்ள கொம்புகரனேந்தல் மருது பாண்டியரின் பாட்டி ஊர் அடிக்கடி இவ்வூருக்கு வந்து நலம் விசாரிப்பார்களாம் இவ்வூரை சேர்ந்த ஒருவர் ஐயாவின் பாதுகாவலராக விளங்கினார் என்று இப்பகுதி அகமுடையார் மக்கள் கூறுகிறார்கள்...!!!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment