Friday, 10 November 2017

நீதி தவறாத அகமுடையார் எத்திராஜ் முதலியார்



சென்னையில் எத்திராஜ் என்னும் மகளீர் கல்லூரியை தன் சொந்த நிதியில் நிறுவிய எத்திராஜ் முதலியார் (அகமுடையார்) பற்றி அறிந்து கொள்வோம்...!

எத்திராஜ் என்ற அகமுடையார் இல்லையென்றால் இம்மானுவேல் கொலை வழக்கில் இருந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஐயா ஜென்மத்திற்கும் வெளியே வந்திருக்கவே முடியாது ஏனென்றால்
அன்றைய காலகட்டத்தில் பெரியார் உட்பட தமிழகத்தின் பெரும் ஆளுமையாக விளங்கிய பலரும் நேரடியாக மற்றும் மறைமுகமாக முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் வெளியே வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாயிருந்தனர் குறிப்பாக பெரியார் முத்துராமலிங்கத் தேவர் பெரும் குற்றவாளி எனவும் ஏற்பட்ட சாதிக்கலவரத்திற்கு அவரே காரணம் எனவும் அவரை கடுமையாக தண்டிக்க வேண்டுமென்றும் மேடை தோறும் முழங்கினார் அறிக்கைகளும் வெளியிட்டார்...

ஆனால் அத்தகைய அசாதாரண சூழ்நிலையிலும் பெரும் ஆளுமைகளின் எதிர்ப்புகளுக்கு இடையிலும் எத்திராஜ் முதலியார் முத்துராமலிங்கத் தேவர் இவ்வழக்கில் தேவையில்லாமல் சிக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை உணர்ந்தார்...

மேலும் எத்திராஜ் அவர்கள் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சார்பாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் அல்ல அவர் அரசு வழக்கறிஞர் அரசு வழக்கறிஞர் என்பவர் குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக சாட்சிகளை தயாரித்து குற்றத்தை நிரூபிக்கச் செய்ய வேண்டியதே மரபாகும் ஆனால்
அரசு வழக்கறிஞரான எத்திராஜ் அவர்களோ குற்றம் சாட்டப்பட்டவருக்கு சாதகமாக திறமையான வாதங்களை வைத்ததாலேயே பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டார் எதிலும் நியாயத்தோடு நடந்து கொள்பவன் தான் #அகமுடையான் என்பதை நிரூபித்தவர் எத்திராஜ் அகமுடையார் அவர்கள்...!

வரலாற்றை மறந்து விடாதீர்கள் மறைத்தும் விடாதீர்கள் என்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் நமது மருது வரலாறு மீட்புகுழு #மருது

மேற்கோள்கள்
முத்துராமலிங்கத் தேவர் கைது செய்யப்பட்டது குறித்து பெரியார் வெளியிட்ட அறிக்கை

http://keetru.com/index.php/homepage/2009-10-07-11-18-55/2012-sp-1447863194/21151-2012-09-14-09-23-48

No comments:

Post a Comment