நைனப்பன் சேர்வை என்ற வீரமிக்க தளபதி ஒருவர் மாமன்னர் மருது பாண்டியர்களின் படையில் இருந்தார் அவரது வீரத்தையும் உடல் வலிமையையும் பற்றிக் கேள்வியுற்ற பெரிய மருது பாண்டியர் அவர்கள் அதைச் சோதிக்க விரும்பினார்...!
''நைனப்பன் சேர்வை” அவர்களே நான் உங்களுக்கு ஒரு போட்டி வைக்கப் போகிறேன் ஏற்றுக்கொள்ளச் சம்மதமா...? எனக் கேட்டார் பெரிய மருது பாண்டியர் சரி அரசே எதுவென்றாலும் நான் ஏற்றுக் கொள்கின்றேன் உங்கள் சித்தத்தை என் கடமையாக ஏற்றுக் கொள்கிறேன் என்றார் நைனப்பன் சேர்வை போட்டியானது சிவகங்கைக்கும் கடியாவயல் என்னுமிடத்திற்கும் உள்ள தூரம் சுமார் 25 கிலோமீட்டர் ஆகும் இந்த 25 கி.மீட்டர் தூரத்திற்கும் பெரிய மருதுபாண்டியர் குதிரையில் இருந்தபடி போய் வருவார் ஆக மொத்தம் 50 கி.மீட்டர் இந்த தூரத்தை நைனப்பன் சேர்வை குதிரைக்குச் சமமாக ஓடிக் கடக்க வேண்டும் இதுதான் போட்டி போட்டி தொடங்கியது...!
நைனப்பன் சேர்வை அவர்களே நீங்கள் என் குதிரைக்கு முன்னதாக இரண்டு பர்லாங் தூரம் ஓடுங்கள் அதன் பிறகு நான் புறப்படுகின்றேன் என்றார் பெரிய மருது பாண்டியர் நைனப்பன் ஓடினார் பின்னாலேயே குதிரையும் பாய்ந்து வந்தது அருகில் குதிரை வந்ததும் நைனப்பன் சேர்வை பெரிய மருது அவர்கள் அமர்ந்திருந்த குதிரையின் பின்னாலேயே நெருக்கமாக ஓடினார் குதிரை தன் இயல்பான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது நைனப்பரும் ஓடினார் வழியில் பார்த்தவர்களெலலாம் படபடப்பாகப் பேசிக் கொண்டீர்கள்...!
சிலர் என்ன இது கொடுமை மனிதனையும் குதிரையையும் ஒன்றாக பாவிப்பார்களா...??? என பலர் பேசினர் பிறகு சரி அரசர் செய்தால் எதிலும் ஒரு நல்ல உள்நோக்கம் மறைந்திருக்கும் நாட்டை நல்ல முறையில் ஆள்பவரும் மக்களைக் கண்ணாக மதித்து ஆள்பவரும் மன்னர் மருது பாண்டியர்கள் கொடுமையாக எதையும் செய்யமாட்டார் என்று பேசிக் கொண்டனர் ஓடிக் கொண்டிருந்த நைனப்பரின் காலில் ஒரு கருவேல முள் குத்திவிடுகிறது போட்டி அவ்வளவுதான் என்றுதானே நினைப்பீர்கள் அதுதான் இல்லை அந்த முள்ளை எடுப்பதற்காக உட்கார்ந்து நேரத்தைச் செலவிட்டால் குதிரை மறைந்துவிடுமே என்று யோசிக்கும் நேரத்தில் நைனப்பன் சேர்வை தனது இடுப்பில் இருந்த ''வளரி” என்ற ஆயுதத்தால் முள் தைத்த காலை தூக்கி முள்ளை உள் நோக்கி அழுத்தினார்...!
முள் கால் பாதத்திற்குள் நுழைந்துவிடுகிறது வழியைப் பொறுத்துக் கொண்டு குதிரையோடு சேர்ந்து ஓடிச் சரியாக கடியாவயலை அடைந்துவிடுகிறார் மறுபடியும் திரும்பிச் சிவகங்கை நோக்கி ஓடத் தலைப்பட்ட நைனப்பன் சேர்வையைத் தடுத்து அணைத்துக் கொண்டார் மாமன்னர் பெரியமருது பாண்டியர் அவரது கண்களில் கண்ணீர் வழிந்தோடியது...!
நைனப்பன் சேர்வை உங்களின் வீரத்தை நமது சிவகங்கை சீமை மட்டுமல்ல இந்த உலகமே தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான் இந்தக் கடுமையான போட்டியை நான் வைத்தேன் நானும் காட்டில் பல சமயம் பல கிலோமீட்டர் தூரத்தைக் குதிரையை விட வேகமாக ஓடியெல்லாம் கடந்திருக்கின்றேன் உங்களது வீரம் வாழ்க வைத்தியரைக் கூப்பிடுங்கள் நைனப்பரின் காலில் இருக்கும் முள்ளை உடனே அகற்றுங்கள் என்று கட்டளையிட்ட மன்னர் ஊரும் உலகமும் அறியும் வண்ணம் நைனப்பன் சேர்வையைப் பாராட்டி மாலையும் மரியாதையும் பொன்னும் பொருளும் வழங்கினார் மாமன்னர் பெரிய மருது பாண்டியர்...!
நைனப்பன் சேர்வை அவர்களிடம் இருந்த வளரி இன்று சிவகங்கை அருங்காட்சியில் உள்ளது அதை அவரின் வாரிசுதார் கொடுத்துள்ளனர் இன்று அதன் வடிவம் மாறாமல் புதியதாக செய்யப்பட்டது போல் உள்ளது ஒரு சமயம் மருது பாண்டியருடன் சென்ற நைனப்பன் சேர்வைக்கு வேட்டைக்கு காட்டிற்குச் செல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது இருவரும் காட்டு வழியாக சென்று கொண்டிருந்தார்கள் அப்போது எதிர்பாராதவிதமாக புலிவொன்று புதரிலிருந்து வெளிப்பட்டு நைனப்பன் சேர்வையை நோக்கிப் பாயந்தது புலியோடு போராடி அதனைக் கொன்றார் நைனப்பன் சேர்வை பிறகு அப்புலியின் பற்களைப் பிடுங்கிப் பெரிய மருது பாண்டியர் அவர்களின் காலடியில் ''அரசே இது என் காணிக்கை” என்று கூறிப் புலிப் பற்களை வைத்தார் ஆனால் இப்படிப்பட்ட மாவீரனைப் புலியின் பண்பட்ட நகம்பட்ட காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அவரைக் கொன்று வைத்தியர்களைத் தோல்வி அடையச் செய்தன நைனப்பன் சேர்வை மறைந்த போது வைர நெஞ்சத்தை உடையவராக இருந்த மாமன்னர் மருது பாண்டியர்கள் வாய்விட்டுக் கதறி அழுதார்கள்...!
நைனப்பன் சேர்வையின் குடும்பத்திற்குத் தனது குடும்பத்தை போல் எல்லா வசதிகளையும் செய்து கொடுத்தார் பெரிய மருதுபாண்டியர் அவர் மனமுவந்து கொடுத்த சொத்துக்களை இன்றைய தினமும் நைனப்பன் சேர்வையின் சந்ததியினர் அனுபவித்து வருகிறார்கள் சிவகங்கைக்கு அருகில் 12 கி.மீ. தூரத்தில் சாத்தரசன் கோட்டையில் வடபுறத்தில் ஒரு பெரிய ஊரணியை வெட்டி அந்த ஊரணிக்கு #நைனப்பர் #ஊரணி என்று பெயர் வைத்துள்ளார்கள் அவர் பெயரில் இன்றும் அழைக்கப்படுகிறது இப்படி பல நூறு வீர நிகழ்ச்சிகளை சொல்லிக்கொண்டே போகலாம் அந்த அளவிற்கு மக்களை வீரமிக்கவர்களாக ஆக்கி வைத்திருந்தார்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் ...!!!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment