Sunday, 17 September 2017

பெரியகோட்டை பள்ளிவாசலுக்கு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அளித்த மானியம்


இஸ்லாமிய பள்ளிவாசலுக்கு மருது சீமையின் மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் அளித்த மானியம் பற்றி இந்த பதிவில் காணலாம்...!!!

மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் மதநல்லினக்கத்தை ஏற்படுத்தியவர்கள் மேலமேலு  216 ஆண்டுகளுக்கு முன்பே இந்து மக்களுக்கு கோவிலும் கிருஸ்துவ மக்களுக்கு தேவாலயமும் முஸ்லீம் மக்களுக்கு பள்ளிவாசல் பல கட்டிக்கொடுத்து மதநல்லினக்கத்தை ஏற்படுத்தி மருது சீமையினை சீறும் சிறப்புமாக ஆட்சி செய்து வந்தனர் மேலும் பல கோவில்களுக்கு பல ஊர்களை மானியமாக வழங்கினார்கள் அதில் ஒன்று தான் சிவகங்கை #பெரிய #கோட்டை #பள்ளிவாசல்...!!!

சிவகங்கையில் பெரிய கோட்டை என்ற ஊர் உள்ளது இங்கு #நல்ல #முகமது என்ற இஸ்லாமிய ஞானி வாழ்ந்து வந்தார் அவரது மறைவுக்கு பின் அவர் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள ''நல்ல முகமது ஒலியுல்லா'' என்ற பள்ளிவாசலுக்கு மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் #எறும்புகுடி என்ற ஊரை மானியமாக வழங்கினார்கள் இன்று வரை பெரிய கோட்டை பள்ளிவாசல் திருவிழாவிற்கு எறும்புகுடியில் இருந்து மானியமாக பொருள்கள் அளிக்கிறார்கள்...!!! #மருது

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment