மருது வரலாறு மீட்புகுழு இளைஞர்களின் ஒரு சிறிய வரலாற்று தேடல் இது முழுமையாக படியுங்கள்...!
மருது சீமையின் வீர மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வெள்ளையர்களுடன் சிவகங்கை சீமையில் போர் செய்யும் வேலையில் சிவகங்கை அருகே #அதப்படக்கி என்ற கிராமத்தின் வழியே உடல் சோர்வுடன் கடுமையான தண்ணீர் தாகத்துடன் வருகிறார்கள் அந்த நேரத்தில் அதப்படக்கி கிராமத்தில் ஒரு தம்பதியினர் (கணவன் மனைவி) வயலில் விவசாயம் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களிடம் குடிக்க தண்ணீர் கேட்கிறார்கள் மருது பாண்டியர்கள் ஆனா அந்த தம்பதியினர் தண்ணீர் தர மறுத்து விட்டார்கள் மனிதனுக்கு மனிதன் குடிக்க தண்ணீர் தர கூட மறுக்கிறார்கள் என்ற கோபத்தில் மருது பாண்டியர்கள் அந்த தம்பதியினரை பார்த்து '' இனி உங்கள் குடும்பத்திற்கு ஆண் வாரிசு இருக்காது '' என்று சாபம் தந்து அவரது அருகே உள்ள ஒரு கருங்கல்லை எட்டி உதைத்து விட்டு அந்த இடத்தை விட்டு நகர்த்து சென்றுவிட்டனர்...!!!
மருது பாண்டியர்கள் அந்த தம்பதியினருக்கு அளித்த சாபத்தின் விளைவாக இன்று வரை 216 ஆண்டுகளாக அந்த குடும்பத்தில் ஒரு ஆண் வாரிசு கூட பிறக்கவில்லை பலருக்கு வாரிசுகள் இல்லாமல் போய் விட்டது மேலும் மருது பாண்டியர்கள் எட்டி உதைத்த கல்லை இன்று வரை யாரும் அவ்வளவு எளிதில் நகர்த்த முடியவில்லை தற்போது அந்த கல் ஒரு ஊரணியில் உள்ளது அதனை சில காலம் முன்பு வரை அதப்படக்கி கிராம மக்கள் வழிபட்டு வந்து உள்ளார்கள் தற்போது அந்த கல் ஊரணி உள்ளே மறைந்து கிடக்கிறது விரைவில் மருது வரலாறு மீட்புகுழு இளைஞர்கள் மூலம் அந்த கல்லை மீட்டு எடுத்து ஒரு இடத்தில் வைத்து வழிபாடு நடத்தப்படும்...!!!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment