Sunday, 17 September 2017

மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் சிறுவயலில் மக்களுடன் அமர்ந்து பேசிய கல் திண்ணை



மாமன்னர் சின்ன மருது பாண்டியரின் அரண்மனை சிறுவயலில் தங்கியிருந்த காலங்களில் அவரது ஓய்வு நேரத்தில் கல் திண்ணையில் மக்களுடன் மக்களாக அமர்ந்து அவர்களுடன் பேசுவார் சில காலங்களுக்கு பிறகு ஆங்கிலேய எதிரிகள் அதிகமாக இருந்த காலத்தில் மாமன்னர் பெரிய மருது பாண்டியரும் சில நாட்கள் அரண்மனை சிறுவயலில் தங்கியிருந்தார்...!

அப்போது ஒரு நாள் மேல தாளத்துடன் அரண்மனை அருகே ஒரு ஊர்வலம் வந்தது அதனை இந்த கல் திண்ணையில் மக்களுடன் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரிய மருது பாண்டியர் ''விதி மேல தாளத்துடன் என்னை தேடி வருகிறது'' என்று கூறினார்...!

பல ஆண்டுகளாக சிறுவயலில் உடைந்து கிடந்த கல் திண்ணையின் ஒரு சிறு துண்டு தான் இது இதனை இன்று வரை வீட்டில் பத்திரமாக வைத்து பாதுகாத்து வருகிறார்கள் வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை அகமுடையாரின் நேரடி வாரிசுதார்கள் மேலும் அவர்கள் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல் இது...!

இவன் மருது வரலாறு மீட்பு குழு 

No comments:

Post a Comment