மருது சீமை (சிவகங்கை) யில் உள்ள #வீரவளசை என்ற ஊருக்கும் மாமன்னர் மருது பாண்டியர்களுக்கும் உண்டான தொடர்பை இக்கட்டுரையின் மூலம் காண்போம்...!
நீங்கள் படத்தில் காண்பது சிவகங்கையில் வீரவளசை என்ற கிராமத்தில் அமைந்துள்ள #பாண்டியன் #கிணறு ஆகும் இதனை மாமன்னர் மருது பாண்டியர்கள் வெட்டியதால் இதற்கு பாண்டியன் கிணறு என்று பெயர் வந்தது அக்காலத்தில் வீரவளசை வீவீரர்களுக்கும் மேலும் இந்த ஊரின் நலனுக்காக மருது பாண்டியர்கள் வெட்டிய இந்த கிணற்றை இந்த வீரவளசை ஊர் மக்கள் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் வருடம் வருடம் முளைப்பாரி எடுத்து பூதிருவிழா எடுத்து இந்த கிணற்றை தெய்வமாக வணங்கி வருகிறார்கள் 216 ஆண்டுகளுக்கு மேலாக இன்றளவும் இந்த கிணறு உபயோகத்தில் தான் உள்ளது...!
இவையெல்லாம் நமது வரலாற்றை உலகிற்கு எடுத்து சொல்லும் வரலாற்று சின்னங்கள் ஆகும் இன்றளவும் அந்த கிணற்றை சுத்தம் செய்து சீறும் சிறப்புமாக பாதுகாத்து வரும் வீரவளசை கிராம மக்களுக்கு மருது வரலாறு மீட்பு குழு சார்பில் நன்றி கலந்த வாழ்த்துகள்...!
இவன் மருது வரலாறு மீட்பு குழு
No comments:
Post a Comment