Thursday, 28 September 2017

அகம்படி காவல் பணியை மேற்கொண்ட தஞ்சை மண்ணின் மைந்தன் பெரியகோட்டை மன்னப்ப தேவர் அகமுடையார்



தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் இதன் எல்லையை ஒட்டியுள்ள திருவாரூர் மாவட்டத்தின் பல ஊர்கள் கோட்டை என்ற பெயரில் தான் முடிகிறது இங்கு #தேவர் பட்டம் கொண்ட கோட்டைபற்று அகமுடையார்களே அதிகம் வசிக்கின்றார்கள் சில நூறு ஆண்டுகளுகு முன்பு சோழர்களின் ஆட்சிக்கு பிறகு மராட்டிய மன்னர்களின் ஆட்சி காலத்தில் தஞ்சை பகுதி அரசர்களின் கோட்டை கொத்தளங்களை காவல் காக்கும் தொழில் முறையை செய்து வந்ததாகவும் பின்னர் காலபோக்கில் தற்போது விவசாய தொழில் முறைக்கு மாறி வந்ததாகவும் அறிய முடிகிறது இந்த வகையில் இந்த ஊர்களை கட்டிகாக்கும் அதிகாரியாக பெரியகோட்டை என்ற ஊரை சேர்ந்த #மன்னப்பதேவர் அவர்கள் இருந்து வந்துள்ளார் மேலும் காவல் காக்கும் அதிகாரியாக இருந்த இவரை இன்றும் தெய்வமாக வணங்கியும் வருகிறார்கள் கோட்டைகளிலே பெரிய பெயர் பெற்று இருந்த பெரியகோட்டையின் மண்ணின் மைந்தராக இருந்து அரசர்களின் அதிகாரியாக இருந்த மன்னப்ப தேவருக்கு இந்த வம்சத்தின் வழி வந்த சந்ததியினரால் இன்று சிறப்பாக பெரியகோட்டை மண்ணில் சிலை வைத்து ஆலயம் கட்டி கும்பாபிஷேகம் செய்து சிறப்பித்து இருக்கிறார்கள்...!!!

அகமுடையார் வழித்தோன்றல் மன்னப்பதேவர் பற்றிய வரலாற்று செய்திகள் மேலும் திரட்டி பதிவு செய்யப்படும் விரைவில்...!!!

தகவல் உதவி மா.புருசோத்தமன் சொக்கனாவூர்

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment