Friday, 6 October 2017

திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம்



நமது நிகழ்கால வரலாற்றில் கூட திருப்பத்தூர் பற்றிய பல வரலாறுகள் மறைக்கப்பட்டு தான் வருகிறது 21.10.1985 அன்று திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் குருபூஜை வேலைகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் 2 அடி ஆழத்தில் மண்ணை தோண்டிய போது நாம் படத்தில் காணும் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது இது 1 அடி உயரம் உடையது மேலும் இது 18 ம் நூற்றாண்டை சேர்ந்த சிவலிங்கம் ஆகும்...!!!

அக்காலத்தில் மன்னர்களுக்கும் வீராதி வீரர்களும் வீரமரணம் அடைந்தால் அவரை புதைக்கும் போது சமாதியில் சிவலிங்கம் வைப்பது வழக்கம் இதனை பல்லிபடை கோவில் என்று கூறுவார்கள் அது போல மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் வாரிசுகளால் வைக்கப்பட்ட சிவலிங்கமே இது மேலும் 1985 முதல் இன்று வரை அக்டோபர் 24 அன்று திருப்பத்தூரில் மருதரசர்கள் தூக்கிலிடப்பட்ட தினத்தில் அவரது நேரடி வாரிசுதார்கள் காலை பொங்கல் வைத்து சாமி கும்பிடும் வழக்கம் உள்ளது அப்போது இந்த சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்...!!!

இன்றளவும் திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் இந்த சிவலிங்கம் காட்சி தருகிறது #மருது

இவன் மருது வரலாறு மீட்பு குழு

No comments:

Post a Comment