Monday, 30 October 2017

சிவகங்கை முத்தூர் அரண்மனையில் கண்டெடுக்கப்பட்ட கருப்பாயி ஆத்தாளின் திருஉருவ சிலை

மருது வரலாறு மீட்பு குழு மூலமாக சில மாதங்களுக்கு முன்பு சிவகங்கை சீமையில் அமைந்துள்ள மாமன்னர் பெரிய மருது பாண்டியரின் மனைவி கருப்பாயி ஆத்தாளின் முத்தூர் அரண்மனை சுத்தம் செய்து பாதுகாத்து வருகின்றோம் இது அனைவரும் அறிந்ததே...!!!

தற்பொழுது அக் 27 குருபூஜை முன்னிட்டு முத்தூர் அரண்மனையை சுத்தம் செய்து சீரமைக்கும் பணியில் நமது மருது வரலாறு மீட்புகுழு ஈடுபட்ட பொழுது அங்கு 2 அடி ஆழத்தில் #கருப்பாயி ஆத்தாளின் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது...!!!

கருப்பாயி ஆத்தாளின் சிலையை முத்தூர் மக்கள் அனைவரும் வியந்து பார்த்து வணங்கி வருகிறார்கள் விரைவில் சிலை சுத்தம் செய்து சிறப்பு வழிபாடு நடைபெற உள்ளது...!!!

என்றும் வரலாற்றை மீட்டெடுக்கும் பணியில் நமது மருது வரலாறு மீட்புகுழு இளைஞர்கள்...!!!

No comments:

Post a Comment